ஆம்பூரில் அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு கொரோனா
ஆம்பூர்: வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகன், மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் கணவர் உட்பட 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர் கபீல் மகன், மருமகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரியின் கணவர் உட்பட 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அமைச்சரின் வீடு மற்றும் அவரது மகனின் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு- 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை
மேலும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி தலைமையில் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஒரே நாளில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் மொத்தம் 28பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது.
கோவையில்...
இதனிடையே கோவையில் ஒரே இடத்தில் 14 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருகின்றனர்.
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரானா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை கரும்புக்கடை இலாஹி நகர் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருகிறார்கள்.