அடக் கொடுமையே... நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக அரசு!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பவே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்காக நாடு முழுவதும் நீட் எனப்படும் தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
இத்தகைய தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவே பாழாகிவிடும். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா சட்டசபையில் முதல்வராக ஓபிஎஸ் இருந்த போது நிறைவேற்றப்பட்டது.
இதுவரை இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தரவில்லை என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவையே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பவே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக தமிழக அரசு இப்படி துரோகமான முடிவை எடுத்திருப்பது மாணவர்களையும் பெற்றோரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.