ராஜஸ்தானுக்கு லாரியில் செல்ல முயன்ற 50 தொழிலாளர்கள் அரக்கோணத்தில் தடுத்து நிறுத்தம்
அரக்கோணம்: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் ராஜஸ்தானுக்கு லாரியில் செய்ய முயன்ற 50 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Recommended Video
கொரோனா லாக்டவுன்களால் பிற மாநிலங்களில் அவதிப்படும் கூலி தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மாநில அரசுகளே சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றன.
பிற மாநிலங்களில் உள்ள தங்களது மாநில தொழிலாள்ர்களை சிறப்பு பேருந்துகள் மூலமும் மாநில அரசுகள் அழைத்துக் கொள்கின்றன. இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மா பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே காவல் துறையினர் சோதனை நடத்தினர் லாரி ஒன்றில் 50 தொழிலாளர்கள் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம்பரத்திலிருந்து நடைபயணமாக ராஜஸ்தானை நோக்கி சென்றோம். இடையில் லாரி ஒன்றை பிடித்து அதில் ஏறினோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு மருத்துவ சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரனை நடத்தினர்.