For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் கொலைகள்... பீதியில் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் கொலைகள்... பீதியில் மக்கள்- வீடியோ

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்தனர்.

    ரியல் எஸ்டேட் கொலைகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் ரவுடிகள், அரசியல்வாதிகளினால் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

    திருப்போரூரில் ரவுடி கொலை

    திருப்போரூரில் ரவுடி கொலை

    கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

    முன்விரோத கொலைகள்

    முன்விரோத கொலைகள்

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி சாலையில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டான்.

    திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு

    திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு


    சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சோந்தவர் ரவி. திமுகவைச் சேர்ந்த இவர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
    3பேர் கொண்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ரவி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தது. இதில் ரவியின் அண்ணன் குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

    கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து சென்று விசாரணை நடத்தினர். திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அரசியல் கொலைகள்

    அரசியல் கொலைகள்

    டிசம்பர் 5 ஆம் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் போரூர் அதிமுக பொருளாளர் ஆக இருந்த தமிழ்ச்செல்வன் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு திரும்பிய போது 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் மீண்டும் கொலைகள் அரங்கேறும் மாவட்டமாக மாறி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    அரசியல்வாதிகளும் கடும் அச்சத்தில் உள்ளார்கள்

    English summary
    Temple city Kanchipuram is becoming a city of murders as the killers make murder spree in the town.On Monday evening, two persons hurled country-made bombs at the residence of DMK functionary Ravi at Perumattunallur. The whole episode, in which the duo threw bombs at Ravi's house in a casual manner, was caught in CCTV cameras.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X