For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முற்றும் காவிரி விவகாரம்... டெல்லியில் நாளை மத்திய நீர்வள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் சந்திப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட 3 நாட்களே உள்ள நிலையில் டெல்லியில் நாளை நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்தித்து பேசுகின்றனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் இன்று முதல் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்.

    சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், டெல்லியில் நாளை நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைமை பொறியாளர் சந்திக்கின்றனர்.

    காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இறுதித்தீர்ப்பை அளித்தது. தமிழகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த நீரின் அளவு குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறி இருந்ததால், ஒதுக்கப்பட்ட தண்ணீராவது மேலாண்மை வாரிய கண்காணிப்பில் சரியாக கிடைத்தால் போதும் என்று தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் நிம்மதியடைந்தனர்.

    TN PWD officials flied to Delhi urgently to meet water resources development officials

    ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது, ஒரு திட்டம் தான் அதாவது காவிரி மேற்பார்வைக் குழு தான் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கைவிரித்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று சுட்டிக்காட்டப்படவில்லை, திட்டம் என்று மட்டுமே உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு காவிரி நீரால் பயன்பெறும் 4 மாநிலங்கள் ஒப்புகொண்டதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கம் மார்ச் 29ம் தேதி கடைசி நாள் என்பதால் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் டெல்லயில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி விவகாரத்தில் அரசுக்கும் நெருக்கடி இருக்கும் நிலையில், டெல்லியில் நாளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் சந்திக்க உள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சந்திப்பதற்காக டெல்லி விரைந்துள்ளனர்.

    English summary
    TN PWD officials flied to Delhi urgently to meet water resources development officials sources saying they may meet the officials by tomorrow morning to discuss about CMB formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X