தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை: உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கில், நீதிபதிகளை விமர்சித்தது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதேபோல் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தமிழக அரசியல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக அரசியலில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. தமிழக அரசியலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசியல் பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டும். இரட்டை இலை, உதயசூரியனை பார்த்துத்தான் வாக்களிக்கின்றனர்.
மக்கள் யாருமே வேட்பாளரை பார்த்து வாக்களிப்பது அல்ல.இதனால் புதிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்றுள்ளார்.