For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை: டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் கண்டெடுப்பு
சென்னை: சென்னையில் அரசு ஐ.டி பார்க் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
24 வயதான அந்த பெண் ஊழியரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து போன பெண்ணின் உடல் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்காட் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 9 நாட்களாக காணாமல் போயிருந்த அந்த பெண் ஊழியர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டிசிஎஸ் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா? எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது பற்றி விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.
Comments
English summary
Chennai: A 24-year-old TCS employee's body was found in a highly decomposed state nine days after she went missing. The body was found half a kilometre from TCS office inside government IT park SIPCOT.
Story first published: Saturday, February 22, 2014, 17:26 [IST]