For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் - அமைச்சர் ஜெயக்குமார்

பஸ் கட்டண உயர்வுக்கு பின்னரும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பஸ் கட்டண உயர்வுக்கு பின்னரும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாக கூறியுள்ளார்.

பஸ் கட்டண உயர்வுக்கு திமுக சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கனத்த மனதுடன் தான் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது என்றும் திமுகவின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாத ஒன்று என்று கூறினார்.

TN Transport corp is still in loss says Minister Jayakumar

மேலும் பேசிய அவர், பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும், அதிமுகவின் அரசின் மக்களின் அரசு என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாகவும், இதனை மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

English summary
TN Transport corp is still in loss says Minister Jayakumar. After criticizing the DMK protest he said public wont accept the Stalin charges towards TN Govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X