For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து தொழிலாளர்கள் 24ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 24ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 24ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறை செயலாளருக்கு தொழிற்சங்கத்தினர் ஸ்ட்ரைக் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

TN transport workers strike from September 24

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஒரு வருடமாகியும் நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் அளித்த உறுதிமொழி செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் கூறியுள்ள அவர்கள், மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கும் ஸ்ட்ரைக் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

English summary
TN government is not accept to fulfill the transport workers demands, so they announced state wide strike from September 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X