காவிரி: மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பும் போராட்டம்: ஜி.கே.வாசன்
மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் மெயில்அனுப்பும் போராட்டம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் மெயில் அனுப்பும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ் மாநில
காங்கிரஸ் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய தமாக தலைவர் ஜி.கே.வாசன், காவிரி விவசாயிகள் பிரச்னையில்மத் திய அரசு தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை இ ழைத்துவிட்டது.பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு விவசாயிகள் பிரச்னை, சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
காவிரி என்பது தமிழக உரிமை. அதை எப்போதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள், இதை பயிர்ப் பிரச்னையாகக் கருதுவதை விடுத்துமத்திய அரசு உயிர்ப் பிரச்னையாகக் கருதவேண்டும் .
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து வருகிற 6ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவுள்ளோம். அதே நேரம் தமிழர்உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து தமிழக இளைஞர்களும், மாணவர்களும் பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் இ- மெயில் அனுப்பும் போராட்டத்தைமுன்னெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.