12 ஆண்டுக்குப் பிறகு தமிழக காங். நிர்வாகிகள் மாற்றம்... ஆனால் ஞானதேசிகன் மாறலை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் தலைவராக ஞானதேசிகனே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமனத்தை நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
புதிதாக 17 துணைத் தலைவர்கள், 27 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வசந்த் அன் கோ வசந்தகுமார் துணைத் தலைவர்
இதுவரை காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவுத் தலைவராக இருந்து வந்த வசந்த் அன் கோ வசந்தகுமார் துணைத் தலைவராகியுள்ளார். அதேபோல வேலூர் ஞானசேகரனும் துணைத் தலைவராகியுள்ளார்.
பொருளாளர் கோவைத் தங்கம்
பொருளாளராக கோவைத் தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவில் வாசன், ஜெயந்தி, ப.சிதம்பரம்
43 பேர் கொண்ட செயற்குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
54 மாவட்டத் தலைவர்கள்
கட்சிக்கு 54 புதிய மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஞானதேசிகன் நீடிப்பார்
தலைவர் பதவியில் ஞானதேசிகனே நீடிப்பார் என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.