For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளனுக்கு பரோல்.. திருநாவுக்கரசர் கடும் கண்டனம்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு.

TNCC President condemns to Perarivalan parole

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன். இதையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், " ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு பரோல் வழங்கியது கடும் கண்டனத்துக்கு உரியது.

இப்போதுள்ள சூழலில், சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
Tamil Nadu Congress Committee President Thirunavukkarasar condemned on Tamilnadu Govt to Perarivalan parole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X