டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க..!
Recommended Video
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை
1. துணை ஆட்சியர் - Deputy Collector (DC) = 18
2. துணை காவல் கண்காணிப்பாளர் - Deputy Superintendent of Police (DSP)=19
3. உதவி ஆணையர் (வணிக வரி) - Assistant Commissioner (AC)= 10
4. கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - Deputy Registrar of Co-operative Societies= 14
5. அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மெண்ட் - Assistant Director of Rural Development= 7
6. தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - District Officer (Fire & Rescue Services)= 1
டிஎன்பிஎஸ்சி இணைதளம் மூலம் இன்றைக்குள் (பிப்.19) விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு வரும் 05.04.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான https://t.co/wRF9SJplnl, https://t.co/Cxz0HPK9jN, https://t.co/iIe3xwhU9C ஆகியவற்றில் அறியலாம்.
அல்லது முழு தகவல்களைப் பெற, https://t.co/ZfI1kztKAU - என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றுபவர்கள 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுவார்கள்.