For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஈசி.. கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டம்.. தேர்வு எழுதியர்கள் கருத்து

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியோர் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 5,451 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தமாக ஈசியாக இருந்ததாகவும், கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

இன்று தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 301 மையங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று எழுதினார்கள்.

TNPSC Group IV exam easy say candidates

தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த தேர்வு எழுதியோர், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தாக தெரிவித்துள்ளனர். மேலும், கணக்கு தொடர்பான கேள்விகளும், ஆங்கிலம் தொடர்பான கேள்விகளும்தான் சற்று சிரமமாக இருந்தாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்தத் தேர்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட டிஎன்பிஎஸ்பி தலைவர் அருள்மொழி, துணை ஆட்சியர், டிஎஸ்பி ஆகிய 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பான தகவல்கள் இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
TNPSC Group IV exam, which held today, is very easy, but Maths and English little difficult said candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X