For Daily Alerts
Just In
குரூப்- 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு- 29ஆம் தேதி தேர்வு உறுதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வானது, 29 ஆம் தேதி கண்டிப்பாக நடைபெறும் என்று அவ்வாணையம் இன்று அறிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வு நடக்க இருக்கும் அதே நாளில், மேலும் 3 தேர்வுகள் நடக்க இருப்பதால், அத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குரூப்-2 தேர்வானது குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்றும், அதற்கான நுழைவுச் சீட்டையும் தனது இணையதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி ஆணையம்.
குரூப்-2 தேர்விற்கான நுழைவுச் சீட்டை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Comments
English summary
TNPSC released the hall ticket for the Group-2 examination which is held on coming 29th.
Story first published: Friday, June 20, 2014, 8:47 [IST]