For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரூப்-1 தேர்வில் 83 பேரின் தேர்ச்சி ரத்து – உத்தரவுக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் மனு

Google Oneindia Tamil News

சென்னை: குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் தேர்ச்சியை ரத்து செய்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், துணை போலீஸ் அதிகாரி, மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரி உள்ளிட்ட பதிவிகளுக்கான குரூப்-1 தேர்வை 2004 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 83 பேர் தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்களின் தேர்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றமும் 83 பேரின் தேர்ச்சியினை கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் டின்.பி.எஸ்.சி தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அர்சு பணியாளர் தேர்வாணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், 83 பேர் தேர்ச்சி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சரியாக கையாளவில்லை. எனவே இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
TNPSC again filed petition in Supreme Court for renewing the case of 83 officials’s dismiss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X