மீடியா வெளிச்சத்தில் இருந்தும் தப்பிக்க விஜயபாஸ்கரின் மனைவி செய்த கில்லாடி வேலை!
மீடியாக்களின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
சென்னை : வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா அதிகாரிகள் வருவதற்கு முன்னர்அதிகாலையிலேயே வருமானவரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததில் தொடர்பு இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் புதுக்கோட்டையில் உள்ள குவாரிகள் கடந்த ஏப்ரல் 7ந்தேதி வருமான வரி சோதனைக்கு ஆளனாது. இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக வருமான வரி அதிகாரிகள் விஜயபாஸ்கரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணையும் நடத்தினர்.
இந்நிலையில் விஜயபாஸ்கரின் பெரும்பாலான நிறுவனங்களில் அவரது மனைவி ரம்யாவிற்கும் பங்கு இருப்பதால் அவரையிம் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஏப்ரல் 3ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில் மாலையில் ஆஜராவதாக தெரிவித்தார். ஆனால் 4 மணி, 5 மணி இரவு 9 மணி என மாறி மாறி டைம் கேட்ட ரம்யா இறுதி வரை ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே அமைச்சரின மனைவி ரம்யா அடையாளம் தெரியாத கார் ஒன்றில் ஏறி வருமானவரித்துறை அலுவலகத்தில் போய் அமர்ந்து விட்டாராம். மீடியாக்களுக்கு பயந்தே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் மனைவி விசாரணைக்கு ஆஜரானாலும் அதிகாரிகள் 10 மணிக்கே வருவார்கள் என்பதால் ஏறத்தாழ 5 மணி நேரத்திற்கும் மேலாக பதட்டத்தடனே அமர்ந்திருக்கிறாராம் ரம்யா.
அமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதையும், அதில் உள்ள உண்மைகளையும் மீடியாக்கள் பிரிச்சு மேய்ந்தத போல தாமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே ரம்யா அதிகாலையிலேயே சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமன வரி அலுவலகம்சென்றாராம். தற்போது வருமான வரி அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட கேமராக்கள் அவரை படம்பிடிக்க காத்திருக்கின்றன, எப்படி தப்பிப்பார் ரம்யா கேமரா லென்சுகளிடம் இருந்து என்பது விசாரணை முடிவிலேயே தெரிய வரும்.