வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று மட்டும் 'பாட்டில்'களுக்கு லீவு....!
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஒரே கட்டமாக எண்ணப் பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுவையில் வாக்குப்பதிவு நடைபெற்ற சமயத்தில் மூன்று நாட்களுக்கு மது விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. எனவே, இன்று ஒருநாள் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.
இதனால், நேற்றிரவு டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் விற்பனை மூலம் கிடைக்கப்பட்ட தொகையினை டாஸ்மாக் பணியாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வைத்திருந்து, இன்று வங்கியில் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் ரூ70 கோடி முதல் 80 கோடி வரையிலான தொகை வசூலாகி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே இன்று ஒருநாள் டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுப்பு வழங்கப் பட்டதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.