தக்காளி விக்கிற விலைக்கு இனி தக்காளி சட்னி வேணும்னு கேப்பியா?
சென்னை: தக்காளி விலை சதமடித்துள்ளதால் அதை வாங்குவதற்கு இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். வீடுகளிலும், ஹோட்டல்களிலும் தக்காளி சட்னி இருந்த இடத்தை தேங்காய் சட்னியும், வெங்காய சட்னியும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. தக்காளி விலை ஏற்றம் சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ் ரூபாத்தில் பரவி வருகிறது.
அன்றாட சமையலில் தக்காளி முக்கிய இடம் பிடித்துள்ளது. தக்காளி எண்ணற்ற சத்துக்களை கொண்டது. வைட்டமின் சி சத்து நிறைந்த தக்காளி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் பயன்படுகிறது.
சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள்.
தக்காளியின் நிறமும், உணவிற்கு தரும் கூடுதல் சுவையினாலும் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியின் விலை ஏற்றம் இறக்கம் கொண்டது.
தக்காளியின் விலை கிலோ 5 ரூபாய்க்கும் விற்பனையாகும்... திடீரென்று 100 ரூபாய்க்கும் விலை உயரும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை தக்காளி கிலோ 5ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக சதமடித்துள்ளது தக்காளி விலை. இந்த விலை உயர்வு இன்னும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் சமூகவலைத்தளங்களில் தக்காளி மீம்ஸ் பிரதான இடம் பிடித்துள்ளது.
|
என்னத்த சொல்ல
தக்காளி விக்கிற விலைக்கு ஏழைங்க தான் சட்னி ஆகுறாங்க என்னத்த சொல்ல என்கிறார் இந்த வலைஞர்.
|
தேங்காய் சட்னி
வீட்டில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி கேட்டால் இனி இந்த ரியாக்சன்தான்போல.
|
புளியின் அருமை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்... அதுபோல புளியின் அருமை தக்காளி விலை ஏற்றத்தில் தெரியும். எனவே தக்காளி விலை ஏறினால் புளிதான் மாற்று என்கிறார் இந்த வலைஞர்.
|
அதுதான் நடக்காது
தக்காளி சட்னி இல்லைன்னா என்ன? தேங்காய் சட்னி இருக்கே என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறார் இந்த வலைஞர்.
|
வீட்டிலும் நோ தக்காளி
தக்காளி விலை செஞ்சுரி அடிச்சிருச்சி அதான் வீட்ல தக்காளி நடமாட்டத்தையே காணோம் என்கிறார் இந்த வலைஞர்.