For Daily Alerts
Just In
மலை உச்சியில் செல்பி.. வனத்துறை தடுக்க கோரிக்கை! - வீடியோ
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணகள் மலை உச்சியில் நின்று செல்பி எடுப்பதை வனத்துறை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை: சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு ஆபத்தான வகையில் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகையில் தற்போது இதமான சூழல் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உதகைக்கு குவிந்து வருகின்றனர்.
அவர்கள் டால்பின் நோஸ் உள்ளிட்ட ஆபத்து நிறைந்த பகுதிகளில் மலை உச்சியில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
English summary
Tourist who are comes to Ooty they are takin photo and selfie at top of the hills. Public urging forest department to take action on that.
Story first published: Saturday, July 8, 2017, 14:43 [IST]