குற்றாலத்தில் 2 நாட்களுக்கு பிறகு குளிக்க தடை நீக்கம்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றால அருவியில் கடந்த 2-நாட்களாக குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கடந்த இரண்டு நாட்களாக அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்து. 3-வது நாளான இன்று காலையிலும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிந்த நிலையில், மதியம் முதல் அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.