ஆஹாவென ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. வெண் நுரை பொங்க கொட்டும் நீர்.. குளிக்க தடை!
அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை: தமிழகமெங்கும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்தவாறே உள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும்காலங்களில் மழை குறித்த ரெட் அலார்ட் என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
[ ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்! ]
போக்குவரத்து நெரிசல்
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டங்களின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ரெட் அலார்ட்
இந்நிலையில், தொடர் மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியிலும் நீர் பெருக்கெடுக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் இங்க குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுருளி அருவி
அதேபோல, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சுருளி அருவியிலும் வெண்நுரை பொங்க வெள்ள நீர் ஓடுவதால் குளிப்பதற்கான தடை 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய அருவிகளில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும், குளிக்க தடை விதிக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர்.
குற்றாலம் ஸ்பெஷல்
ஆனால் குற்றாலம் மட்டும் ஸ்பெஷல்! அங்கு குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் அங்கு கனமழை காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.