குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் முதன்மை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளின் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களைகட்டி இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் சீசன் மந்தமாக காணப்பட்டது.

சாரல் மழை:
அவ்வப்போது பெய்த சாரல் மழையால் அருவிகளில் குறைவான தண்ணீரே விழுந்தது. நீர்வரத்தும் அதிகமாக இல்லை.

பயணிகள் ஏமாற்றம்:
இதனால் நாடெங்கிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் போதிய தண்ணீர் கொட்டததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதிகரிக்கும் மழை:
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்வதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டத்தொடங்கியுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கினர்.

வெள்ளப் பெருக்கு:
நேற்று இரவுமுதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அருவியில் குளிக்கத் தடை:
இதன் காரணமாக இன்று காலை 10 மணிக்கு மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மிதமான தண்ணீர் வரத்து:
ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications