For Daily Alerts
Just In
போராடி வென்ற பூமகளே.. கவிதை பாடி டி.ராஜேந்தர் வாழ்த்து!
சென்னை: முதல்வர் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ள ஜெயலிதாவுக்கு லட்சிய திமுக தலைவரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கவிதை பாடி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போராடி வென்ற பூ மகளே
கோட்டைக்குச் செல்லும் கோமகளே
ஐந்தாவது முறையாக
அரியணையில் அமரப் போகும்
அஞ்சா நெஞ்சங் கொண்ட ஆரணங்கே
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின்
சிம்மாசனத்தை அலங்கரிக்கப் போகும்
சேலை கட்டிய சிம்மமே
அன்புள்ளங் கொண்ட
தாய்குலத்தின் சின்னமே
மாண்புமிகு முதல்வர் அம்மாவுக்கு
மனங்கனிந்த வாழ்த்துகள்
என்று அந்த வாழ்த்துச் செய்தியில் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டாரா, அவர் வந்தாரா என்பது தெரியவில்லை.
Comments
English summary
Director and LDMK leader T Rajendhear has greeted Jayalalitha for becomng CM again.
Story first published: Saturday, May 23, 2015, 18:41 [IST]