ராதாகிருஷ்ணன் நகரைக் கலகலகலக்க வைத்த "எம்.ஜி.ஆர்" ராமசாமி!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதிமுகவினர் ஒருபக்கம்ி படை பலத்தோடு பிரசாரம் செய்து வருவதைப் பொருட்படுத்தாமல், அவரும் தன்னால் முடிந்தவரை அசத்தி வருகிறார்.
அவர், திங்கள்கிழமை சைக்கிள் ரிக்சாவை ஓட்டியபடியே பிரச்சாரம் செய்தார். அப்போது எம்ஜிஆர் அணிந்திருந்தது போலவே தொப்பி, சால்வை, கண்ணாடி ஆகியவற்றை அணிந்து வாக்கு சேகரித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஆர்கே நகருக்கு உட்பட்ட வ.உ.சி.நகரில் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய டிராபிக் ராமசாமி எம்ஜிஆர் கெட்டப்பில் தொப்பி, துண்டு அணிந்தபடி ரிக்ஷா வண்டியை ஓட்டிய படி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
எம்ஜிஆர் கெட்டப்பில் பிரசாரத்தை தொடங்கினார் டிராபிக் ராமசாமி! (படங்கள்) http://t.co/9Cig062fkE pic.twitter.com/1FxHCbJnhs
— விகடன் (@vikatan) June 15, 2015
மேலும், தனது சின்னமான கேமிராவை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சைக்கிள் ரிக்ஷாவில் காந்தி வேடமிட்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அவரும் டிராபிக் டிராமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று அவர் வாக்குகளை சேகரித்து வருகிறார்.
டிராபிக் ராமசாமியின் இந்த அதிரடி பிரசாரத்தால் தொகுதி மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதேசமயம், எம்ஜிஆர் வேடம் போடாமல் இவரைத் தடுப்பது எப்படி என்ற யோசனையில் அதிமுகவினர் மூழ்கியிருப்பதாக தெரிகிறது.