For Daily Alerts
Just In
சென்னை அண்ணாசாலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு:மக்கள் கடும் அவதி
சென்னை அண்ணாசாலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்- வீடியோ
சென்னை : சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால் சென்னையில் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம், வாலஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கோட்டை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர். இதனால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Comments
jacto geo protest secretariat tamilnadu teachers government traffic ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு தலைமைச் செயலகம் கோட்டை முற்றுகை கைது ஆசிரியர்கள் போக்குவரத்து
English summary
Traffic Heavily affected due to Jacto Geo Protest. Jacto Geo members Protest to siege Secretariat Police blocked the Roads and the Traffic heavily affected and Public suffers alot.
Story first published: Tuesday, May 8, 2018, 11:53 [IST]