குடியரசு தினத்தன்று கொடியேற்ற முதல்வர் ஓபிஎஸ்க்கு டிராபிக் ராமசாமி எதிர்ப்பு
குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடியரசு தினத்தில் கொடியேற்றக்கூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆளுநர் இல்லாத பட்சத்தில் தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
நாளை நாடுமுழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்துக்கு என தனி ஆளுநர் இல்லாததால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்துள்ளார். அதில் குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்றக் கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் இல்லாத பட்சத்தில் தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். நாளை குடியரசுதினம் கொண்டாடப் படவுள்ள நிலைய்ல டிராபிக் ராமசாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.