For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மரணம்- டிராபிக் ராமசாமி வழக்கு! அப்பல்லோ ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு வலியுறுத்தல்!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்பல்லோ ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது செனை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Traffic Ramaswamy seeks probe on Jayalalithaa's death

அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்; அப்பல்லோ மருத்துவமனையின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

English summary
Social Activist Traffic Ramaswamy today filed a plea to Seekig probe on Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X