For Daily Alerts
Just In
மூளை சாவு... பலரை வாழ வைத்த சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர்- உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுருகனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
நேற்று முன் தினம் அதிகாலை பணியில் இருந்த பாலமுருகன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய சிவசங்கரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன் மூளைச்சாவினைத் தழுவினார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முன்வந்தனர்.
கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உட்பட அவருடைய உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டது. இதனால் கிட்டதட்ட 6 பேர் மறுவாழ்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Chennai traffic police died in an accident, his organs donated by family.