For Daily Alerts
Just In
பலத்த சூறைக்காற்று.. பாம்பன் பாலத்தில் நடுக்கடலில் ரயில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு !
ராமேஸ்வரம்: பலத்த சூறைக்காற்று வீசுவதால் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் நடுவழியில் நிற்கிறது.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பாம்பன் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசிக் கொண்டிருந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் இடையே நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள தூக்குப்பாலத்தில் ரயிலை இயக்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரயில் நடுவழியிலேயே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாம்பன் பாலத்தில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Rameshwaram-madurai passenger train movement stoped on Pamban bridge affected due to heavy winds.
Story first published: Thursday, July 20, 2017, 2:39 [IST]