For Daily Alerts
Just In
தண்டவாளத்தில் விரிசல்.. தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி
Recommended Video
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புறநகர் ரயில்கள் தாமதம்..வீடியோ
சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கபெருமாள்கோயில்-காட்டாங்குளத்தூர் நடுவே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இதயைடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, சிங்கபெருமாள்கோயில்-காட்டாங்குளத்தூர் இடையே குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை கடந்த காலை 6 மணி முதல் பாதிக்கப்பட்டது.
காலையிலேயே பணிக்கு செல்ல புற நகர் ரயில்களை நம்பியிருக்கும் பயணிகள் இதனால் அவதிப்பட்டனர்.
Comments
English summary
Train service affected between Tambaram and Chengalpattu due to track cracking. Train passengers suffer.
Story first published: Monday, August 6, 2018, 8:04 [IST]