For Quick Alerts
For Daily Alerts
Just In
மீனவர்களுக்கு தூக்கு- பற்றி எரியும் ராமேஸ்வரம்- ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
ராமேஸ்வரம்: 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன.
5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற செய்தி வெளியானது முதல் ராமேஸ்வரம் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன.
தங்கச்சிமடத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. இதனால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.
ராமேஸ்வரத்தில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முற்று முழுதாக ராமேஸ்வரத்துக்கான போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது.
Comments
tamilnadu sri lanka fishermen death sentence protest இந்தியா இலங்கை தமிழகம் மீனவர்கள் போராட்டம் ரயில் சேவை பாதிப்பு
English summary
Train Services for Rameswaram hit by Fishermen massive protest against death sentence by Sri lanka to 5 Tamils.
Story first published: Thursday, October 30, 2014, 19:16 [IST]