நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஜாம்பஜார் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. முக்கிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
[நக்கீரன் கோபால் திடீர் கைது.. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை ]
மிக முக்கியம்
நக்கீரன் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 124வது பிரிவு என்பது ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக போடப்படும் வழக்கு ஆகும்.
தனி பிரிவு
கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மேலே குறிப்பிட்ட வழக்கு இல்லாமல் தேச துரோக வழக்கு தனியாக பதியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏன் இந்த பிரிவு
ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரிலேயே இந்த பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சிலரின் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
முதல் முறை
இந்தியாவிலேயே ஆளுநர் புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருப்பதும் இதுவே முதல்முறையாகும். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.