மாமனார்-மாமியார் தற்கொலை – கடன் தொல்லையால் மருமகனும் தற்கொலை
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன்-உமையாள் தம்பதியின் மருமகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர்களின் மகளான ரமாவின் கணவர் செந்தில், குறிஞ்சிபாடியில் வட்டி கடை நடத்தி வந்த நிலையில் அவரும் கடன் தொல்லையில் இருந்து வந்துள்ளார். இதனால் பணத்தை கேட்டு அவருக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று செந்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன்-உமையாள் தூக்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து ரவிச்சந்திரன் தம்பதி தூக்கில் தொங்கினார்களா அல்லது அந்த தகவல் கிடைப்பதற்கு முன்பாகவே தம்பதிகள் தங்கள் முடிவை தேடி கொண்டார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.