For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளரை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. சென்னை, பெரம்பலூரில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வெள்ளையன் என்பவரை சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் என்கவுண்டர் செய்யப்படும் அபாயம் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் வெள்ளையன். இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல், பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என பல வழக்குகள் மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

Trichy DIG orders to nab PB secretary alive or dead

இதுதொடர்பாக கோர்ட்டுகள் பலமுறை வாரண்ட் பிறப்பித்தும் கூட அவர் ஆஜரவாவதில்லை. இந்த நிலையில் வழக்குகள் தொடர்பாக அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அவரைக் காணவில்லை. தலைமறைவாகி விட்டார். சென்னையில் ஒரு முக்கிய இடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படும் இடத்தை ரெய்டு செய்து அவரைப் பிடிக்க முடியாத நிலையில் போலீஸார் உள்ளதாக தெரிகிறது. மீறிப் பிடிக்கப் போனால் பிரச்சினை வரலாம் என்றும் போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் அவரை உயிருடனோ அல்லது தேவைப்பட்டால் பிணமாகவோ பிடிக்குமாறு திருச்சி சரக டிஐஜி செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் பெரம்பலூர் மற்றும் சென்னையில் உள்ள புதிய பாரதம் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

English summary
Trichy DIG Senthilkumar has ordered the Perambalur district police to nab Purathi Bharatham party's district secretary alive or dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X