ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர் திருச்சி சிவா வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்காக திமுக வேட்பாலர் திருச்சி சிவா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. ராஜ்யசபா தேர்தலை நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா இன்று தமது வேட்பு மனுவை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்ய வருகிற 28ந்தேதி கடைசி நாள் மனுக்கள் மீதான பரிசீலனை 29ந்தேதியும், மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 31ந்தேதி கடைசி நாளாகும்.
தேர்தலுக்கு வாக்குப்பதிவு அவசியமாக இருந்தால் அடுத்த மாதம் 7-ந்தேதி சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடைபெறும்.












Click it and Unblock the Notifications