திமுகவுக்கு திவாகரன் கொடுத்த ஆதரவை வரவேற்கிறேன் - திருச்சி சிவா
திமுக நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்துக்கு திவாகரன் ஆதரவு தெரிவித்ததை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாத காரணத்தால், மரணம் அடைந்த அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி பின்னர் மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்டது. மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
திமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார். இதனை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். மேலும், உயர்நீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் தமிழக அரசு நியாயமாக போராடாததே அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என திருச்சி சிவா எம்.பி.கடுமையாக சாடினார்.