For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் செய்த தவறை இனி யாரும் செய்யாதீர்கள்: கண்கலங்கிய திருச்சி சிவா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்.பி. திருச்சி சிவா மரணம் அடைந்த தனது மனைவியை நினைத்து அழுக அதை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் கண்கலங்கினார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி மார்பக புற்றுநோயால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி திருச்சி சிவாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நாராயணசாமியிடம் சிவா கூறுகையில்,

பலம்

பலம்

என் காதல் மனைவி இறப்பதற்கு முந்தையநாள் நான் அவளிடம் நீ தான் என் பலம் என்று கூறியதற்கு மெல்ல சிரித்தாள்.

தவறு

தவறு

என் வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் நீ தான் என்று மனைவியிடம் கூற தவறிவிடுகிறோம். நானும் அந்த தவறை செய்ததை தற்போது தான் உணர்கிறேன்.

நீங்களும்

நீங்களும்

நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். மனதில் உள்ளதை மனைவியிடம் தெரிவித்துவிடுங்கள் என்று என்னை பார்க்க வருபவர்களிடம் இனி கூறுவேன்.

கஷ்ட காலத்தில்

கஷ்ட காலத்தில்

நான் கஷ்டப்பட்ட காலத்தில் வெறும் மஞ்சள் கயிற்றோடு குடும்ப கஷ்டம் யாருக்கும் தெரியாதவாறு சிரித்த முகத்தோடு இருந்தாள். போராட்டத்திற்கு சென்றால் திலகம் வைத்துவிட்டாள். பொதுக் கூட்டத்தில் இருந்து வீடு திரும்பினாள் சிரித்த முகத்தோடு வரவேற்றாள். அவள் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது.

சம்சாரம்

சம்சாரம்

இனி வீட்டின் மாடியில் நானும், கீழ் மகனும் இருப்பான். எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியும். சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று கூறி சிவா கண்கலங்கினார்.

நாராயணசாமி

நாராயணசாமி

சிவா கண்கலங்கியதை பார்த்த நாராயணசாமி தனது மனைவி விபத்தில் பலியானது பற்றி கூறி அவரும் கண்கலங்கினார்.

English summary
DMK MP Trichy Siva got emotional thinking about his wife Devika Rani who succumbed to breast cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X