For Quick Alerts
For Daily Alerts
Just In
என்னது கடலில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடை சுனாமி எச்சரிக்கை கருவி அபேஸா?
வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கருவி காணவில்லையாம்.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை கருவி காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கடலோர பாதுகாப்புக் குழு இயக்குநர் ரமேஷ் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 400 கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ50 லட்சம் மதிப்புள்ள இந்த கருவியை காணவில்லை. இதனை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடலில் வைக்கப்பட்டிருந்த இத்தனை கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
bay of bengal chennai ennore port tsunami warning வங்க கடல் சென்னை எண்ணூர் துறைமுகம் சுனாமி காணவில்லை
English summary
National Disaster Management Authority Directors said that the Tsunami warning alaram missing from Bay of Bengal, near Chennai Ennore port.