வெற்றி என்பதை தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது.. எச்சரிக்கும் ஓஎஸ் மணியன்!
வெற்றி என்பதை டிடிவி தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வெற்றி என்பதை டிடிவி தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். பதிலுக்கு அமைச்சர்களும் டிடிவி தினகரனை சாடி வருகின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்கே நகரில் வெற்றி பெற்றது குறித்து அமைச்சர் ஓஎஸ் மணியன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது டிடிவி தினகரன் இனி ஒரு போதும் இன்னொரு தேர்தலில் வெற்றி என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாது என கூறினார்.
மேலும் ஜனநாயக விரோத பார்முலாவை அறிமுகப்படுத்தி மோசடி செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹவாலா ஃபார்முலாவை பயன்படுத்தி ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியது குறிப்பபிடத்தக்கது.