For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறை வணக்கம் பாடுங்க... ஆனா தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பிறகு பாடியிருக்கலாம்- தினகரன்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு, இறை வணக்கம் பாடியிருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாடுங்க..வேண்டாமுன்னு சொல்லல..-டிடிவி- வீடியோ

    சென்னை: சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு இறை வணக்கம் பாடியிருக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    TTV Dinakaran condemns for Sanskrit song sung in Chennai IIT

    இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.

    ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் இசைக்கப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெசன்ட் நகரில் டிடிவி தினகரன் கூறுகையில் ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக மக்கள் எந்த திணிப்பையும் ஏற்க மாட்டார்கள்.

    இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக அரசு திணிக்க முயற்சிக்கிறது. தமிழ் தாய் வாழ்த்துக்கு பின் இறைவணக்கம் பாடியிருக்கலாம்.

    மக்களின் உணர்வுகளை தூண்டிவிடுகிறது பாஜக. தமிழகத்தில் தவறான கலாசாரத்தை உருவாக்கிறார் எச்.ராஜா என்றார் தினகரன்.

    English summary
    TTV Dinakaran condemns for sanskrit song which was sung in Chennai IIT while stone pelting function happens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X