"நமது எம்ஜிஆர்" நாளேட்டில் கருப்பு ஆடுகள்... நடவடிக்கை எடுத்தாகிவிட்டது... தினகரன்
நமது எம்ஜிஆர் நாளேட்டில் கருப்பு ஆடுகளாக இருந்தவர்களை நீக்கப்பட்டுவிட்டனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை: நமது எம்ஜிஆர் நாளேட்டில் பாஜகவுக்கு எதிராக எழுதியவர்களை விவேக் நீக்கயிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மேலூரில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஏற்றிய ஏணியை மிதிப்பவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனரை நீக்கியுள்ளனர்.
நமது எம்ஜிஆர் நாளேடு முன்னர் சசிகலா மேற்பார்வையில் இருந்தது. தற்போது எங்கள் உறவினர் விவேக் பொறுப்பில் இருக்கிற்றது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் கருப்பு ஆடுகளாக இருந்தவர்களை விவேக் நீக்கவிட்டார். மேலும் பாஜகவுக்கு எதிராக எழுதியவர்களையும் இன்னேரம் அவர் நீக்கியிருப்பார் என்று கருதுகிறேன்.
இந்த மேலூர் பொதுக் கூட்டம் எனக்கு வெற்றியைக் கொடுக்கும். சுயநலத்துக்காக மற்றவர்கள் சொல்லை கேட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு தினகரன் கூறினார்.