பாவம் செய்தவர்கள் மூழ்கினால் நதிதான் மாசுபடும்.. எடப்பாடியார் குறித்து தினகரன் விமர்சனம்
பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கடந்த 12ஆம் தேதி மகா புஷ்கரம் விழா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மயிலாடுதுறை காவிரியாற்றில் நீராடி வருகின்றனர்.
இந்த மகா புஷ்கரம் விழா வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 9 ஆம் நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் மயிலாடுதுறை காவிரியாற்றில் புனித நீராடினர்.
இந்நிலையில் முதல்வர் புனித நீராடியது குறித்து டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துரோகத்தை போக்க எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகாது என்றார்.
பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார். மாணவி அனிதா மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்றும் கூறினார்.