ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை!
ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் சசிகலா குடும்பத்தினர் ஒட்டு மொத்த பேரையும் சுற்றி வளைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தினகரன் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் சர்வ சாதாரணமாக கோ பூஜை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது வீட்டில் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை என கூலாக பேட்டியளித்தார். தனது உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு அரசியல் உள்நோக்கமே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் ரெய்டில் எந்த உள்நோக்கமும் இல்லை என தினகரன் கூறியதற்கு எதிராக பேசினர் விவேக். விவேக்கின் நண்பர் சரவணன், தினகரனுக்கு அரசியல் பின்புலமாக இருப்பவர் விவேக் என்றார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர் வீட்டில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.