For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் இரங்கல்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகர். இவர் தமிழாசிரியராக இருந்தார். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார்.

TTV Dinakaran expresses his condolence for SriRangam Math Seers death

இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது இறுதி சடங்குகள் நாளை மேலூரில் நடைபெறும் என்று மடத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தினுடைய சுவாமிகள், ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் அவர்கள் வைகுண்ட பதவி அடைந்தார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.

தமிழ் மொழியின் மீது பெரும் பற்றுக்கொண்டவராகவும், கல்விப் பணியையும், ஆன்மிகப் பணியையும் சிறப்போடு முன்னெடுத்த ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தினுடைய சுவாமிகளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
TTV Dinakaran expresses his condolence for Srirangam Math Seer's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X