For Daily Alerts
Just In
இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்!
சென்னை இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க டிடிவி தினகரன் அத்தொகுதிக்கு சென்றுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி ஜெயலலிதா மறைவால் காலியனாது. ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றக் கொண்ட அவர் இதுவரை ஆர்கே நகர் தொகுதி மக்களை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதிக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு சென்ற அவர் தொகுதி பிரச்சனை குறித்து கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தன்னை வெற்றி பெறச் செய்த ஆர்கே நகர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
Comments
ttv dinakaran by poll rk nagar by poll 2017 ஆர்கே நகர் நன்றி டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் 2017
English summary
TTV Dinakaran going to thank RK Nagar people today. Dinakaran has won in the RK Nagar by poll. He will be meeting RK Nagar constutency people today.