குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு.. அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மிது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள 36 பேர் மீது இந்தியா இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது எடப்பாடி அரசின் காழ்ப்புணர்ச்சி என தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.