For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே நகர் மக்களுக்கு நன்றி.. தொகுதிக்கு சென்று தினகரன் பேச்சு!

ஆர்.கே நகரில் வாக்காளர்களை சந்தித்து வருகிறார் டி.டி.வி. தினகரன்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகரில் வாக்காளர்களை சந்தித்து வருகிறார் டி.டி.வி. தினகரன். மேலும் அவர் தேர்தல் வெற்றிக்காக தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

ஆர்.கே நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்று தினகரன் அபாரமாக வெற்றிபெற்றார். அதன்பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தனது முதல் சட்டமன்ற பேச்சை பேசினார்.

TTV Dinakaran meets RK Nagar people

இந்த நிலையில் தற்போது அவர் ஆர்.கே நகர் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அதன்பின் அவர் மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்று கூறினார்.

மேலும் அவர் பேருந்து கட்டண உயர்வு குறித்து பேசினார். அதில் ''பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். மக்கள் பேருந்து கட்டண உயர்வை ஏற்கவில்லை. விலை உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். நாங்கள் எப்போதும் அதிமுகதான். மீண்டும் அந்த பெயரில் செயல்படுவோம்'' என்று கூறினார்.

English summary
TTV Dinakaran meets RK Nagar people after election. He says Thanks to every people who votes for him, who made him as the MLA for RK Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X