நான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட வழக்கு தொடரப்படலாம்: டிடிவி தினகரன் நக்கல்
தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது தேச விரோத வழக்கு போடும் அளவிற்கு என் மீது எந்த புகாரும் இல்லை என்று அவர் கூறினார்.
தேச விரோத வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தினகரன் தெரிவித்தார். எதிரிகள் தானாக வந்து எங்களிடம் மாட்டுகிறார்கள் என்ற அவர் இதற்கு முன்ஜாமின் எல்லாம் வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தினம் ஒரு வழக்கு தொடர்வார்கள்
இவர்கள் அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக தினம் ஒரு வழக்கு தொடர்வார்கள் என்ற அவர் இந்த ஆட்சி முடிய போகிறது என்றார். போலீசார் சட்டத்திற்கு புறம்பாக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என்ற டிடிவி தினகரன் அதனை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன் என்றும் கூறினார்.
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது
நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் மாற்றப்படும்
என் மீது பொய் வழக்கு தொடர்வதை நிரூபிப்பேன் என்ற அவர் அதற்கு காரணமானவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்றும் எச்சரித்தார். தன்மீது வழக்கு தொடர்ந்தவர்கள் மீது கோர்ட் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிச்சயம் அரசாங்கம் மாற்றப்படும் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
கொசுக்களை தூண்டிவிடுவதாக
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறதா என்பது மக்களுக்கு தெரியும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். அப்போது
தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் நக்கலடித்தார்.