For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது வீீட்டு மீது யார் குண்டு வீச முயன்றிருப்பார்கள் தெரியுமா? டிடிவி தினகரன் பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க கூடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி:

வெடித்தது பெட்ரோல் வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் குண்டா என்பதை கண்டறிய வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

 TTV Dinakaran press meet on bomb issue

எதற்காக குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. அதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகள் கிடையாது. கட்டப்பஞ்சாயத்து கிடையாது, நிலத்தகராறு கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் இதை செய்திருக்க கூடும்.

உருவ பொம்மையை எரித்ததாகவும் அதனால் கார் சேதமடைந்ததாகவும் கூறப்படவது தவறு. புல்லட் பரிமளம் கார் டிரைவர் எதையோ கொளுத்துவதும், அதையடுத்தே கார் வெடிப்பதும் அதில் தெளிவாக உள்ளது. இதுபற்றி போலீஸ் விசாரிக்க வேண்டும். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அடையாறு பகுதியிலுள்ள, தினகரன் வீடு அருகே நின்றிருந்த இன்னோவா காரில் குண்டு வெடித்ததில், தினகரன் கார் டிரைவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரை ஓட்டி வந்த டிரைவர்தான் குண்டை வெடிக்க செய்ததாகவும் தெரிகிறது.

English summary
TTV Dinakaran said that people who think that his party is hindrance to them may be hurdle a bomb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X